திருக்கோவலூர்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்

Monday, September 10, 2012

திருக்கோவலூர் திவ்யதேச பாசுரங்கள்:


ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:
ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி குரவே நம:

பெரிய திருமொழி இரண்டாம் பத்து பத்தாம் திருமொழி:

முதல் பாசுரம்

மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும்*
         வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம்*
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேலோர்* இலந்தளிரில் 
         கண் வளர்ந்த ஈசன் தன்னை*
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்*
         தூய நான் மறையாளர் சொமுச் செய்ய*
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்*
         திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*

இரண்டாம் பாசுரம்:

கொந்தலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்*
            தீபம் கொண்டு அமரர் தொழப் பணங்கொள் பாம்பில்*
சந்தணி மென் முலை மலராள் தாரணி மங்கை
           தாமிருவர் அடிவருடும் தன்மையானை*
வந்தனை செய்து இசையேழ் ஆறங்கம்* ஐந்து
           வளர்வேள்வி நான்மறைகள் மூன்று தீயும்*
சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும்* செல்வத் 
           திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*

மூன்றாம் பாசுரம்:

கொழுந்தலரும் மலர்ச் சோலை குழாங்கொள் பொய்கைக்*
             கோள் முதலை வாழ் எயிற்றுக் கொண்டற்க்கு எள்கி*
அழுந்திய மாகளிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி
              அந்தரம்மே வரத் தோன்றி அருள் செய்தானை*
எழுந்த மலர் கரு நீளம் இருந்தில் காட்ட
              இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன் காட்ட*
செழுந்தட நீர்க்கமலம் தீவிகை போல் காட்டும்*
              திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*

நான்காம் பாசுரம்:

தாங்கரும்போர் மாலிபடப் பறவையூர்ந்து*
          தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை*
ஆங்கரும்பிக் கண்ணீர் சோர்ந்து அன்பு கூரும்*
          அடியவர்கட்கு ஆரமுதம் ஆனான் தன்னை*
கோங்கரும்பு சுரபுன்னை குரவார் சோலை*
          குழாவரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு*
தீங்கரும்பு கண்வளரும் கழனி சூழ்ந்த*
           திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*


ஐந்தாம் பாசுரம்:

கறை வளர்வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி*
              கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்
பிறை எயிற்று வாளரக்கர் சேனை எல்லாம்*
              பெருந்தகையோடு உடன் துணித்த பெம்மான் தன்னை*
மறை வளரப் புகழ் வளர மாடந்தோரும்*
              மண்டபம் ஒண் தொளியனைத்தும் வாரமோத*
சிறையணைந்த பொழிலணைந்த தென்றல் வீசும்*
              திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*


ஆறாம் பாசுரம்:

உறியார்ந்த நறுவெண்ணெய் ஒளியால் சென்று* அங்கு
        உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு  ஆர்க்க*
தரியார்ந்த கருங்களிறே போல நின்று*
        தடங்கண்கள் பனிமல்கும் தன்மையானை*
வெறியார்ந்த மலர்மகள் நாமங்கையோடு*
        வியன் கலை எண் தோளினாள் விளங்கு* செல்வச்
செறியார்ந்த மணிமாடம் திகழ்ந்து தோன்றும்*
        திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*

ஏழாம் பாசுரம்:

இருங்கைம்மா கரி முனிந்து பரியைக் கீறி*
         இனவிடைகள் ஏழடர்த்து மருதம் சாய்த்து*
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு*
        வஞ்சம் செய் கஞ்சனுக்கு நஞ்சு ஆனானை*
கருங்கமுகு பசும்பாளை வெண்முத்து ஈன்று*
        காய் எல்லாம் மரகதமாய் பவளம் காட்ட*
செருந்திமிகு மொட்டு அலர்த்தும் தேன்கொள் சோலைத்*
        திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*

எட்டாம் பாசுரம்:

பாரேறு பெரும்பாரம் தீரப்* பண்டு
         பாரதத்துத் தூதியங்கி* பார்த்தன் செல்வத்
தேரேறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை*
         செருக்களத்துத் திறலழியச் செற்றான் தன்னை*
போரேறு ஒன்றுடையானும் அளகைக் கோனும்*
         புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல்*
சீரேறு மறையாளர் நிறைந்த* செல்வத்
         திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே

ஒன்பதாம் பாசுரம்:

தூவடிவின் பார்மகள் பூமங்கையோடு*
      சுடராழி சங்கிருபால் பொலிந்து தோன்ற*
காவடிவின் கற்பகமே போல நின்று*
      கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை*
சேவடிகை திருவாய் கண் சிவந்த ஆடை*
      செம்பொன்செய் திருவுருவம் ஆனான் தன்னை*
தீவடிவின் சிவனயனே போல்வார்* மன்னு
       திருக்கோவலூரதனுள் கண்டேன் நானே*
  
பத்தாம் பாசுரம்:

வாரணம் கொள் இடர் கடிந்த மாலை* நீல 
       மரதகத்தை மழை முகிலே போல்வான் தன்னை*
சீரணங்கு மறையாளர் நிறைந்த* செல்வத் 
      திருக்கோவலூரதனுள் கண்டேன் என்று*
வாரணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்*
     வாள் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார்*
காரணங்களால் உலகம் கலந்தங்கேத்தக்*
     கரந்தெங்கும் பரந்தானைக் காண்பர் தாமே*
           

பாசுர அர்த்தங்கள் பின்வரும் பதிப்புகளில் பதிவு பண்ணப்படும்.

தாசானு தாசன்

இராமானுஜ சிஷ்யன்