திருக்கோவலூர்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பண்ணப்பட்ட முதல் திவ்யதேசம் திருக்கோவலூர்

Tuesday, April 24, 2012

திருக்கோவலூர் திவ்ய க்ஷேத்திர விவரம்:


திருக்கோவலூர் திவ்ய க்ஷேத்ரம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. விழுப்புரத்தில் இருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

க்ஷேத்திர விவரம்:
திவ்யதேசம் - திருக்கோவலூர்
வேறு பெயர் - பூங்கோவலூர், கோபாலபுரம், கோபபுரி
நடுநாட்டு திருப்பதிகளுள் ஒன்று ஆகும்
நூற்று எட்டு திவ்யதேசங்களுள் ஒன்று ஆகும்
பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரங்களுள் ஒன்று ஆகும்
வாமன திரிவிக்கிரம அவதார ஸ்தலம்
வாமனனுக்கு தனி சந்நிதி உண்டு
ஸ்ரீ விஷ்ணு துர்க்கைக்கு தனி சந்நிதி உண்டு
ஆகமம் - வைகானசம்
இந்தத் திருக்கோவிலைப் பற்றிய வரலாற்று விஷயங்கள் பாத்ம புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
க்ஷேத்திர பெருமாள்: ஸ்ரீ வேணுகோபாலன்
மூலவர் - ஸ்ரீ த்ரிவிக்ரம சுவாமி
உத்சவர் - ஸ்ரீ தேஹளீச ஸ்வாமி(இடைகழி ஆயன் என்று திருநாமம்)
தாயார் மூலவர் - ஸ்ரீ பூங்கோவல் நாச்சியார்
தாயார் உத்சவர் - ஸ்ரீ புஷ்பவல்லி தாயார்
ப்ரத்யக்ஷம் - மிருகண்டு மகரிஷி, பலி சக்கரவர்த்தி மற்றும் முதல் ஆழ்வார்கள்.
விமானம் - ஸ்ரீ கர விமானம்
நதி - ஸ்ரீ கிருஷ்ணபத்ரா(தென்பெண்ணை ஆறு)
திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடத்தைச் சேர்ந்த திருக்கோயில்

No comments: